மரக்கறிகளை கொண்டுசெல்ல அனுமதி வழங்குமாறு ஆலோசனை

உணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் ஆலோசனை

by Staff Writer 28-03-2020 | 3:09 PM
Colombo (News 1st) மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நுகர்வோருக்கு அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்லல் அவசியம் என்பதை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். மெனிங் சந்தை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்களுக்கு உணவுப்பொருட்களை கொண்டுசெல்வதில் வாகனங்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பிரதமர், பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார். இதனடிப்படையில் இவ்வாறான தடைகளை தவிர்த்து, உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லுமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.