பெப்ரவரி, மார்ச் மாத VAT-ஐ செலுத்த கால அவகாசம்

2020 பெப்ரவரி, மார்ச் மாத VAT-ஐ செலுத்த கால அவகாசம்

by Staff Writer 27-03-2020 | 11:53 AM
Colombo (News 1st) 2020 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான VAT எனப்படும் பெறுமதி சேர் வரியை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30 ஆம் திகதி வரை வர்த்தக நிறுவனங்களுக்கு இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக ஏப்ரல் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முற்பட்ட திகதிகளில் செலுத்தும் வரிக்கு தாமதக்கட்டணம் அறவிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.