பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கம் சந்தா அறவிடாது - வே.இராதாகிருஷ்ணன்

by Bella Dalima 27-03-2020 | 6:02 PM
Colombo (News 1st) கொரோனா பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் வரை பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கம் சந்தா அறவிடாது என முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், தொழிற்சங்கத்தில் சேவையாற்றும் உத்தியோகத்தர்களுடைய சம்பளத்தை எந்த வகையிலாவது வழங்க வேண்டிய சூழலில் தாம் இருப்பதாகவும் வே.இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.