மருந்தகங்களை மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிப்பு

அரசாங்க மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய மருந்தகங்களை மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிப்பு

by Staff Writer 27-03-2020 | 4:04 PM
Colombo (News 1st) அரசாங்க மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மருந்தகங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு பதில் பொலிஸ் மா அதிபரால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார். பொதுமக்களுக்கு சலுகை வழங்கும் நோக்குடன் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், அவை முறையற்ற வகையில் பயன்படுத்தப்படுவதாக அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார். அரச மருந்தகங்கள் மற்றும் ஒன்லைன் ஊடாக பொருட்களை பெற்றுக்கொள்ளும் சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பல்பொருள் அங்காடிகளையும் வர்த்தக நிலையங்களையும் மருந்தகங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

ஏனைய செய்திகள்