கொழும்பின் பெரும்பாலான பகுதிகளில் நீர்வெட்டு 

by Staff Writer 26-03-2020 | 2:34 PM
Colombo (News  1st) கொழும்பில் ஒரிரு பகுதிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவசர திருதப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்று பகல் 01 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 ஆகிய பகுதிகளில் முழுமையாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு 4, 14 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.