எழுக தாய்நாடு: எண்ணங்களை சித்திரங்களாகத் தீட்டுங்கள்

by Staff Writer 25-03-2020 | 8:47 PM
Colombo (News 1st) மக்கள் சக்தி - 'எழுக தாய்நாடு' என்ற தலைப்பின் கீழ் நேற்று (24) ஆரம்பிக்கப்பட்ட சித்திரப் போட்டிக்கு தற்போது சித்திரங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. எதிர்கால இலங்கை எவ்வாறு அமையும் என்ற தங்களின் குடும்பத்தினரின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், இந்த சித்திரங்களை வரைய முடியும். இன்று கிடைக்கப்பெற்ற சித்திரங்களில் சிறந்த 10 சித்திரங்களை கொழும்பு கலை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஜகத் பத்மசிறி தெரிவு செய்தார்.