இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் பதிவாகவில்லை

by Staff Writer 25-03-2020 | 7:05 PM
Colombo (News 1st) இன்று மாலை 4.30 வரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மற்றுமொருவர் குணமடைந்துள்ளார். IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே குணமடைந்துள்ளார். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மூன்றாவது நபர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, 102 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 99 பேர் வைத்தியசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் 225 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிலுள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்றும் இன்று காலையும் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். நியூஸ்ஃபெஸ்ட்டில் இன்று காலை ஔிபரப்பான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொலைபேசியூடாக இணைந்து கொண்டு டொக்டர் சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்தார்.