இத்தாலியில் இலங்கையர் உயிரிழந்ததாக தகவல்

இத்தாலியில் இலங்கையர் உயிரிழப்பு: தகவலை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவிப்பு 

by Staff Writer 25-03-2020 | 3:16 PM
Colombo (News 1st) இத்தாலியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்ததாக வௌியாகியுள்ள தகவலை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் இத்தாலி ஊடகங்களில் மாத்திரம் தகவல் வௌியாகியுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ருவந்தி தெல்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் இதுவரை உறுதியாகவில்லை என ரோமுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.