கண்காணிப்பு நிலையத்திலிருந்து முதற்குழு வௌியேற்றம்

கண்காணிப்பு நிலையங்களில் இருந்து முதலாவது குழுவினர் வௌியேற்றம்

by Staff Writer 24-03-2020 | 2:48 PM
Colombo (News 1st) வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தி, கண்காணிக்கும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முதலாவது குழுவினர் இன்று அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 311 பேர் இவ்வாறு கண்காணிப்பின் பின்னர் அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார். இவர்கள் கொரோனா தொற்று உலகளாவிய ரீதியில் வியாபித்த பின்னர் இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்பியவர்களாவர். மட்டக்களப்பு - புனானை கண்காணிப்பு நிலையத்திலிருந்து 203 பேரும், கந்தக்காடு நிலையத்திலிருந்து 108 பேரும் கண்காணிப்பின் பின்னர் இன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கண்காணிப்பு நிலையங்களிலிருந்து அனுப்பப்பட்டவர்களை கண்டி, மாத்தறை மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு இலங்கை இராணுவத்தினர் விசேட பஸ்களில் அழைத்துச்சென்றுள்ளனர்.