by Staff Writer 24-03-2020 | 5:45 PM
Colombo (News 1st) அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களின் உணவுத் தேவைக்கான நிவாரணப் பொதியை வழங்குமாறு உள்ளூராட்சிமன்றத் தலைவர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபை அமைச்சர் ஜனக்க பண்டார ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கு தேவையான வழிகாட்டல்கள் அனைத்து உள்ளூராட்சிமன்றத் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றினூடாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் நிலையைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.