வங்கி ஊழியர்கள் கடமைகளில் ஈடுபட அனுமதி

வங்கி ஊழியர்கள் கடமைகளில் ஈடுபட அனுமதி

by Staff Writer 23-03-2020 | 2:49 PM
Colombo (News 1st) வங்கி ஊழியர்கள் கடமைகளில் ஈடுபட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமது அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி வங்கி ஊழியர்கள் பணி இடங்களுக்கு செல்ல முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் அத்தியாவசிய தேவையாக உள்ளதால் வங்கி ஊழியர்கள் கடமையில் ஈடுபட முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார் இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் அதிவேக வீதிகளூடாக பயணிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக அதிவேக வீதிகளை பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.