மும்மொழிகளிலும் கொரோனா தொற்று தொடர்பான விசேட நிகழ்ச்சி

by Staff Writer 23-03-2020 | 8:41 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று குறித்து மக்களுக்கு தௌிவுபடுத்துவதற்காக MTV/MBC ஊடக வலையமைப்பு ஒலி, ஔிபரப்பு நேரத்தை இன்றும் ஒதுக்கியிருந்தது. கொரோனா தொற்று தொடர்பான விசேட நிகழ்ச்சி மும்மொழிகளிலும் இரண்டு மணித்தியாலங்கள் நேரடியாக ஔிபரப்பானது. வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல், சக்தி FM அலைவரிசை பிரதானி ஆர்.பி.அபர்ணா சுதன், MTV நிறுவன பிரதம நிறைவேற்றதிகாரி சுசார தினால் ஆகியோர் இந்த நிகழ்ச்சி மூலம் மக்களை தௌிவுபடுத்தினர்.