முதியோருக்கான கொடுப்பனவை வழங்க நடவடிக்கை

முதியோர் மற்றும் நோயாளர்களுக்கான கொடுப்பனவை கிராம உத்தியோகத்தர்களூடாக வழங்க நடவடிக்கை

by Staff Writer 23-03-2020 | 3:08 PM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குரிய முதியோர் மற்றும் நோயாளர்களுக்கான கொடுப்பனவை கிராம உத்தியோகத்தர்களூடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டார். இந்த கொடுப்பனவை பெறும் பயனாளிகள் தங்களின் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரை சந்தித்து அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறினார். சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளதால், கிராம உத்தியோகத்தருக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டு அவரை சந்திக்க செல்லுமாறு தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். முதியோர் மற்றும் நோயாளர்களுக்கான கொடுப்பனவை தற்போது தபால் நிலையங்களில் வழங்க முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.