சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கோரிக்கை

கொரோனா தொற்றைத் தடுக்க சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அரசாங்கம் கோரிக்கை

by Staff Writer 23-03-2020 | 3:24 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதன் மூலம் மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. சுகாதார துறையினரின் இந்த பாரிய சவாலை வெற்றிகொள்வதாயின், வைரஸ் தொற்றை இல்லாதொழிக்க வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள், கடைகள், பஸ்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லும் போது, ஏனைய நபர்களுடன் இடைவௌியை பேணுமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை இல்லாதொழிப்பதற்கு விசேட வைத்திய நிபுணர்களின் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாசியப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அரசாங்கம் மக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. பஸ், ரயில் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் போது பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும், எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள செல்லும் போதும் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் பிரகாரம் செயற்படுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.