by Staff Writer 23-03-2020 | 2:57 PM
Corona (News 1st) கொரோனா ஒழிப்பிற்கான சார்க் (SAARC) நிதியத்திற்கு இலங்கை 5 மில்லியன் டொலர் நிதி அன்பளிப்பு
கொரோனா ஒழிப்பிற்காக ஸ்தாபிக்கப்பட்ட சார்க் நிதியத்திற்கு 5 மில்லியன் டொலர் நிதியை அன்பளிப்பு செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மார்ச் 15 ஆம் திகதி சார்க் அரச தலைவர்களுக்கிடையில் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போதே கொரோனா ஒழிப்பிற்கான சார்க் நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது.