அம்மன் ஆலயம் சென்றோர் திருப்பி அனுப்பப்பட்டனர்

கிளிநொச்சியில் ஊரடங்கு நேரத்தில் அம்மன் ஆலயத்திற்கு சென்ற மக்களை பொலிஸார் திருப்பி அனுப்பினர்

by Staff Writer 23-03-2020 | 8:33 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில், கிளிநொச்சி பொறிக்கடவை அம்மன் ஆலயத்திற்கு சென்ற மக்களை பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர். பக்தர்கள் ஆலயத்தில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு ஆலயத்தின் அறங்காவலர் சபை அறிவித்திருந்த நிலையிலும் இன்று காலை சிலர் ஆலய வளாகத்தில் கூடியிருந்ததால் பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெரும்பாலான ஆலயங்களில் பக்தர்கள் இன்றி நித்திய பூஜைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.