பொதுத்தேர்தல் தொடர்பில் விசேட வர்த்தமானி வௌியீடு

ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்: விசேட வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 22-03-2020 | 2:51 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் 14 நாட்களுக்குள் பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். அதற்கு பின்னர் வௌியிடப்படும் வர்த்தமானியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கு திட்டமிப்பட்டிருந்த நிலையில் , நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக திட்டமிட்டவாறு தேர்தலை நடத்த முடியாது என மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருந்தார்.

ஏனைய செய்திகள்