சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிடுவதில் தாமதம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வௌியிடுவதில் தாமதம்

by Staff Writer 22-03-2020 | 4:07 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய பெறுபேறுகளை வௌியிடுவதில் தாமதம் ஏற்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெறுபேறுகளை திட்டமிட்டபடி வௌியிட முடியாதுள்ளதாக உதவி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிட்டார்.