யாழில் கொரோனா தொற்று சந்தேகத்தில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 21-03-2020 | 3:12 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரியாலை - கண்டி வீதியிலுள்ள கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவ வழிப்பாட்டு தலமொன்றில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற விசேட ஆராதனையில் இவர்கள் இருவரும் கலந்துகொண்டிருந்ததாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஷ்வரன் தெரிவித்தார். இந்த ஆராதனையை நடத்திய மதபோதகர் கொரோனா அறிகுறிகளுடன் சுவிட்சர்லாந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக கடந்த 15 ஆம் திகதி ஒன்றுகூடலில் கலந்துகொண்ட அனைவரையும் உடனடியாக மருத்துவ பரிசோதனையில் ஈடுபடுமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 021 22 1 72 78 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு உடனடியாக தங்களை பதிவு செய்துகொள்ளுமாறும் அரியாலை பகுதி மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்