by Staff Writer 21-03-2020 | 9:39 PM
Colombo (News 1st) அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மேலும் நான்கு பேர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிறைச்சாலைக்குள் இருந்த சில கைதிகளால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பின் போது கைதி ஒருவர் தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
இதன்போது, சிறைச்சாலை அதிகாரியால் துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.