நாடளாவிய ரீதியில் மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம்

நாடளாவிய ரீதியில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்

by Chandrasekaram Chandravadani 20-03-2020 | 11:05 AM
COLOMBO (News 1st) : நாடளாவிய ரீதியில் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு, வத்தளை மற்றும் ஜா - எல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அந்த பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது