தபால் சேவை இடைநிறுத்தம்

தபால் சேவை இடைநிறுத்தம்

by Staff Writer 20-03-2020 | 5:49 PM
Colombo (News 1st) மறு அறிவித்தல் வரை தபால் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. வௌிநாடுகளில் இருந்து பெறப்படும் பொதிகள் அனைத்தும் தபால் திணைக்களத்தில் வைக்கப்படும் என அறிக்கை ஒன்றினூடாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போது நிலவும் நிலை சுமூகமாகிய பின்னர் தபால் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தபால் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் முதியோர் கொடுப்பனவும் நோய் நிவாரண கொடுப்பனவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.