அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

by Staff Writer 20-03-2020 | 3:49 PM
Colombo (News 1st) இன்றிரவு தொடக்கம் அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, இன்று காலை கொழும்பிற்கு வந்தவர்கள் தங்களின் ஊருக்கு திரும்புவதற்காக சில ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் இன்று மாலை 6 மணி தொடக்கம் அதிவேக வீதியில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க குறிப்பிட்டார். அதற்கமைய இன்று மாலை 4 மணிக்கு பின்னர் அதிவேக வீதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.