மேல் மாகாண ஆளுநர் இராஜினாமா

மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார்

by Staff Writer 19-03-2020 | 9:37 AM
Colombo (News 1st) விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல, மேல் மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து, ஆளுநர் பதவியை தாம் இராஜினாமா செய்ததாக அவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 25ஆம் திகதி அவர் மேல் மாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.