இறக்குமதியாளர்களின் நட்டத்தை ஈடுசெய்ய தீர்மானம்

பருப்பு, டின்மீன் விலை குறைப்பு : இறக்குமதியாளர்களின் நட்டத்தை ஈடுசெய்ய தீர்மானம்

by Staff Writer 19-03-2020 | 8:03 AM
Colombo (News 1st) பருப்பு மற்றும் டின்மீன் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதியாளர்களுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடுசெய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி செயலாளர் மற்றும் அத்தியவசிய பொருள் இறக்குமதியாளர்களுக்கு இடையில் நேற்று (18) மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்பிரகாரம் இறக்குமதியாளர்களுக்கு ஏற்படும் இழப்பினை வாராந்தம் ஈடு செய்வதற்கு இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலாகும் வகையில், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 65 ரூபாவாகவும் டின்மீனின் விலை 100 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.