by Staff Writer 19-03-2020 | 4:33 PM
Colombo (News 1st) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நாளை (20) நள்ளிரவு முதல் பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.
நொய்டா பகுதியிலும் தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாளை நள்ளிரவு முதல் பஸ்கள், முச்சக்கரவண்டிகள் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
திருமண விழாக்கள் மற்றும் மரணச் சடங்குளின் போது 20 -இற்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், தேவை ஏற்படாதவிடத்து மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே பாரத பிரதமர் நரேந்திர மோடி , இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களையும் நாளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.