264 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

264 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

by Staff Writer 18-03-2020 | 9:38 AM
Colombo (News 1st) பொதுத் தேர்தலை முன்னிட்டு 264 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (18) மற்றும் நாளை (19) மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க கூறியுள்ளார். இதேவேளை, அரசியல் கட்சிகள் உள்ளிட்ட 26 சுயாதீன குழுக்கள் இதுவரை வேட்புமனுவை கையளித்துள்ளன. வேட்புமனுவை கையளிக்கும் நடவடிக்கைகளும் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளும் நாளை (19) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.

ஏனைய செய்திகள்