புத்தளம், சிலாபத்தில்  பொலிஸ் ஊரடங்கு சட்டம்

புத்தளம், சிலாபத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

by Staff Writer 18-03-2020 | 1:50 PM
Colombo (News 1st) புத்தளம் பிராந்தியத்தில் 11 பொலிஸ் பிரிவுகளிலும் சிலாபம் பிராந்தியத்தில் 7 பொலிஸ் பிரிவுகளிலும் இன்று மாலை 4.30 முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் கொச்சிக்கடை பகுதியிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் கூறினர். பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாக இன்று பிற்பகலில் பெரும் திரளான மக்கள் வர்த்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்து கூடியிருந்தனர். புத்தளம் நகர மத்தியிலுள்ள மரக்கறி விற்பனை நிலையங்கள் நுகர்வோரால் நிரம்பி வழிந்தன.

ஏனைய செய்திகள்