by Chandrasekaram Chandravadani 18-03-2020 | 1:25 PM
Colombo (News 1st) கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய பரிவர்த்தனை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பரிவர்த்தனை நடவடிக்கைகள் நான்காவது தடவையாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளைய தினம் நாளாந்த கொடுக்கல் வாங்கலை முன்னெடுப்பது குறித்து இன்று (18) மாலை தீர்மானிக்கப்படும் என கொழும்பு பங்கு சந்தையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.