பூசா கடற்படை முகாமில் கண்காணிப்பு நிலையம் ஸ்தாபிப்பு
by Staff Writer 18-03-2020 | 12:04 PM
Colombo (News 1st) பூசா கடற்படை முகாமில் கண்காணிப்பு நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நேற்று (17) முதல் இந்த கண்காணிப்பு நிலையம் இயங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
4 மாடிகளை கொண்ட குறித்த கட்டடத்தில் 136 பேர் தங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான ஆலோசனை மற்றும் பயிற்சிகள் தமது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து நேற்று நாட்டை வந்தடைந்தவர்கள் நேற்று கட்டுநாயக்கவிலிருந்து வவுனியா பம்பைமடு இராணுவ முகாமின் கண்காணிப்பு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அநுராதபுரம் - மெத்சிரிபுர சிறுநீரகநோய் பிரிவையும் கண்காணிப்பு நிலையமாக பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.