by Staff Writer 17-03-2020 | 10:09 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று சென்றிருந்த போது கட்சி உறுப்பினர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், தர்மபால செனவிரத்ன, கேர்ணல் ரத்னப்பிரிய ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக மாவட்ட செயலகத்திற்கு சென்றிருந்தனர்.
எனினும், 03 பேருக்கு மாத்திரமே ஒரு தடவையில் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது, வேட்பாளர்களின் சட்டத்தரணி, காதர் மஸ்தான் மற்றும் கேர்ணல் ரத்னப்பிரிய ஆகிய மூவரும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த செயற்பாட்டிற்கு தர்மபால செனவிரத்ன தனது எதிர்ப்பை வௌியிட்டார்.