மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு

ருகுணு பல்கலையின் பொறியியல் பீடத்திற்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு

by Staff Writer 17-03-2020 | 12:54 PM
Colombo (News 1st) ருகுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கு 21ஆவது மாணவக் குழுவினரை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் நாளைய தினம் (18) முன்னெடுக்கப்படவிருந்தன. நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என ருகுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் உதவி பதிவாளர் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்