by Staff Writer 17-03-2020 | 7:41 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தலை பிற்போடுமாறு அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.
இந்த நிலையில், தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி நாள் பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று அறிவித்தார்.
COVID 19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.