சிறைக்கைதிகளை பார்வையிட  தற்காலிகத் தடை 

சிறைக்கைதிகளை பார்வையிட  தற்காலிகத் தடை 

by Staff Writer 17-03-2020 | 3:22 PM
Colombo (News 1st) சிறைக்கைதிகளை பார்வையிட வருவோருக்கு இன்று முதல் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை கைதிகளுக்கு இடையே கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் கடந்த சனிக்கிழமை முதல் கைதிகளை பார்வையிடுவதற்கு ஒருவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது.