by Staff Writer 17-03-2020 | 3:15 PM
Colombo (News 1st) ஜனாதிபதி செயலணி இன்றைய தினம் கூடியபோது எடுத்த தீர்மானங்களின் பிரகாரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குவது நாளை (18) நள்ளிரவு முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனினும், இலங்கையிலிருந்து வெளியேறுதல், விமானப் பயண இடைமாறல் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் விமான சேவை என்பன தொடர்ச்சியாக இடம்பெறும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்தது.