by Staff Writer 16-03-2020 | 5:10 PM
Colombo (News 1st) பொது விடுமுறையை ஒரு வாரத்திற்கு நீடிக்குமாறும் அனைத்து துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை மூடுமாறும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் பரவிவருகின்ற கொரோன வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.