தனியார் பஸ்களில் கிருமி ஒழிப்பு செயற்பாடு ஆரம்பம்

தனியார் பஸ்களில் கிருமி ஒழிப்பு செயற்பாடுகள் ஆரம்பம்

by Staff Writer 16-03-2020 | 2:31 PM
Colombo (News 1st) தனியார் பஸ்களில் கிருமி ஒழிப்பு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்தில் இன்று (16) காலை கிருமி ஒழிப்பு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் ஊழியர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பஸ் நிலையத்திற்குள் வருகைதரும் பயணிகளின் நலன்கருதி, கைகளை கழுவுவதற்காக விசேட நடவடிக்கைகளும் அங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.