சுதந்திரக் கட்சி 4 மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டி

by Staff Writer 16-03-2020 | 7:30 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம், வன்னி, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது. குறித்த மாவட்டங்களில் 'கை' சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.