கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

by Staff Writer 16-03-2020 | 10:08 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று (16) புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் ஒருவர், நாட்டில் இரண்டாவதாக தொற்றுக்குள்ளான சுற்றுலா வழிகாட்டியின் 13 வயதுடைய மகள் ஆவார். மற்றைய நோயாளி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றிய அதிகாரியாவார். அவர் தற்போது தேசிய தொற்றுநோயியல் நிறுவகத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இதேநேரம், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வருகை தரும் 14 நாடுகளைச் சேர்ந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்