இலவச உர விநியோகம் ஆரம்பம்

இலவச உர விநியோகம் ஆரம்பம்

by Staff Writer 16-03-2020 | 3:24 PM
Colombo (News 1st) இலவசமாக உரம் வழங்கும் வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது. உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் முறைக்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் ஏனைய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என உர செயலகத்தின் பணிப்பாளர் மகேஷ் கம்மன்பில தெரிவித்துள்ளார். சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகள் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமாகின்றன. இயற்கை உரத்தை பயன்படுத்தி சிறுபோகத்தில் 30,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் 25 கோடி ரூபாவை வழங்கியுள்ளதாக உர செயலகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.