'இன்றைய விடுமுறையை நீடிக்கும் தீர்மானம் இல்லை'

இன்று வழங்கப்பட்ட விடுமுறையை நீடிக்கும் தீர்மானம் இல்லை - பந்துல குணவர்தன

by Chandrasekaram Chandravadani 16-03-2020 | 3:49 PM
Colombo (News 1st) இன்று வழங்கப்பட்டுள்ள அரச விடுமுறையை நீடிக்கும் தீர்மானமில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒருநாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நாளை (17) தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நாளை (17) முதல் 20 ஆம் திகதி வரை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருந்த அனைத்து வழக்குகளும் மீள திகதியிடப்படும் என உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார். புதிய திகதிகள் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.