அரிசி இறக்குமதிக்கு தடை

அரிசி இறக்குமதிக்கு தடை

by Staff Writer 16-03-2020 | 2:50 PM
Colombo (News 1st) பாஸ்மதி அரசி தவிர்ந்த ஏனைய அனைத்து வகையான அரிசிகளையும் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. 9 மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பிலுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. தென்னகோன் கூறியுள்ளார். இதேவேளை, இம்முறை சிறுபோகத்தில் 4 இலட்சம் ஹெக்டேயர் நிலப்பகுதியில் நெற்செய்கையை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.