நாளை முதல் வானிலையில் மாற்றம்

வடக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மழை

by Staff Writer 15-03-2020 | 9:22 AM
Colombo (News 1st) வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நாளை (16) முதல் மழையுடனான வானிலை நீடிக்கும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேநேரம் மேல் மாகாணம், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று (15) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.