பொதுத்தேர்தலில் சஜித் கொழும்பில் போட்டி

பொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டி - சஜித் தெரிவிப்பு 

by Staff Writer 14-03-2020 | 5:47 PM
Colombo (News 1st) எதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அவிசாவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். புதிய கூட்டணியின் அரசியல் நடவடிக்கைகளை நிறுத்த சதித்திட்டம் தீட்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.