கைதிகளைப் பார்வையிட ஒருவருக்கு மாத்திரமே அனுமதி 

சிறையிலுள்ள கைதிகளைப் பார்வையிட ஒருவருக்கு மாத்திரமே அனுமதி 

by Staff Writer 14-03-2020 | 5:42 PM
Colombo (News 1st) சிறையிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்று முதல் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு கைதிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். சிறைக்கைதிகளைப் பார்வையிட இதற்கு முன்னர் மூவருக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.