மஞ்சள், இஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

காலியில் மஞ்சள் மற்றும் இஞ்சி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

by Staff Writer 14-03-2020 | 7:48 PM
Colombo (News 1st) காலி மாவட்டத்தில் மஞ்சள் மற்றும் இஞ்சி செய்கையை விஸ்தரிப்பதற்கு ஏற்றுமதி விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மஞ்சள் மற்றும் இஞ்சி இறக்குமதியை தடுத்து, உள்நாட்டு உற்பத்திகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சந்தையில் பச்சை மஞ்சள் ஒரு கிலோகிராம் 1,100 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.