பொதுமக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை

உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை - இராணுவத்தளபதி

by Staff Writer 13-03-2020 | 3:22 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது. அதிகளவிலான மக்கள் நேற்றிரவு பல்பொருள் அங்காடிகளில் நிறைந்து காணப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். அவர்கள் தேவையற்ற விதத்தில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தமையை காணக்கூடியதாக இருந்ததாகவும் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். எவ்வாறாயினும், உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் வீணாக அச்சமடையத் தேவையில்லை என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்