அரச பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு

இரண்டு வாரங்களுக்கு அரச பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிப்பு

by Staff Writer 13-03-2020 | 3:34 PM
Colombo (News 1st) நாளை (14) தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு அரச பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுடனான கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார். அதற்கமைய, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வார இறுதி நாட்களில் நடத்தப்படும் பகுதிநேர வகுப்புக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.