சோளச் செய்கையில் ஈடுபட்டோருக்கு கடன் வழங்க திட்டம்

சோளச் செய்கையில் ஈடுபட்டோருக்கு கடன் வழங்க திட்டம்

by Staff Writer 12-03-2020 | 7:53 AM
Colombo (News 1st) போதுமானளவு சோளம் கையிருப்பிலுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் தடவை 70000 ஏக்கரில் சோளம் பயிரிடப்பட்டது. இதன்மூலம் கிடைக்கப்பெற்ற அறுவடை 3 இலட்சம் மெற்றிக் தொன்களாகும். இந்நிலையில் விவசாய அமைச்சு அடையாளங்கண்டுள்ள அனைத்து காணிகளிலும் சோளப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இம்முறை வருடாந்த சோள உற்பத்தியை 8 மெற்றிக் தொன்களாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. பாரியளவில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அரச வங்கிகளின் மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.