by Bella Dalima 12-03-2020 | 8:20 PM
Colombo (News 1st) கொழும்பு பங்குச்சந்தையின் வழமையான பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
ஒரு வாரத்திற்குள் இரண்டாவது தடவையாகவும் கொழும்பு பங்குச்சந்தையின் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கொழும்பு பங்குச்சந்தையின் S&P SL20 சுட்டியானது இன்றைய நாளுடன் ஒப்பிடுகையில் 5 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமையால் இவ்வாறு பங்குச்சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.